Thirukural - Thiruvalluvar - Tamil
Total Pageviews
Tuesday, June 28, 2011
திருக்குறள் - 50
திருக்குறள் - 50
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் உள்ள தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படுவான்.
Thursday, June 23, 2011
திருக்குறள் - 49
திருக்குறள் - 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பொருள்: இல்வாழ்க்கை அறன் எனப் படும். பழிப்புக்கு இடம் இல்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
Tuesday, June 21, 2011
திருக்குறள் - 48
திருக்குறள் - 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விடப் பெருமை உடையதாகும்.
Friday, June 17, 2011
திருக்குறள் - 47
திருக்குறள் - 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராக திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
Wednesday, June 15, 2011
திருக்குறள் - 46
திருக்குறள் - 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போய்ப் பெறுவ தெவன்.
பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் பெற்றிட இயலுமா? இயலாது.
Friday, June 10, 2011
திருக்குறள் - 45
திருக்குறள் - 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
திருக்குறள் - 44
திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)