Total Pageviews

Monday, February 7, 2011

திருக்குறள் - 7


திருக்குறள் - 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள்:  தனக்கு உவமை இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழி ஏதும் இல்லை. 

திருக்குறள் - 6


திருக்குறள் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி, எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் வாழ்வு, நிலையானதாக அமையும்.

திருக்குறள் - 5


திருக்குறள் - 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்: இறைவன் என்பதற்கரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

திருக்குறள் - 4



திருக்குறள் - 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்: விருப்பு வெறுப்பற்று தன்னலமின்றி திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 

Friday, February 4, 2011

திருக்குறள் - 3



திருக்குறள் - 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்: மலர் போன்ற மனதில் நிறைந்தவனை பின் பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

திருக்குறள் - 2



திருக்குறள் - 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
பொருள்:  தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையானின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

திருக்குறள் - 1


திருக்குறள் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன்,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.