Total Pageviews

Monday, April 18, 2011

திருக்குறள் - 29

திருக்குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காதல் அரிது.
பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Monday, April 11, 2011

திருக்குறள் - 28

திருக்குறள் - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காடும்.

Sunday, April 10, 2011

பெண்ணென்னும் பேரழகு


பெண்ணென்னும் பேரழகு 
----------
சலசலக்கும் சிற்றோடை.  
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள். 
அதன் குளுமையான நிழல். 
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.  
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.
அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது 
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது 

Thursday, April 7, 2011

திருக்குறள் - 27


திருக்குறள் - 27
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி லான் கட்டே உலகு.
பொருள்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

திருக்குறள்............

பால்களோ மூன்று,
அடிகளோ இரண்டு,
வள்ளுவன் ஒருவன்,
வழங்கிய வரிகள்,
வையத்து இயல்பையும்,
...வைத்தடைக்கியது 1330ல்,
திருக்குறள்............

Wednesday, April 6, 2011

திருக்குறள் - 26

திருக்குறள் - 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார்.
பொருள்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரை பெரியோர் என்றும், சிறுமையான செயல்களை அன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களை சிறியோர் என்றும் வரையறுக்கலாம்.

Tuesday, April 5, 2011

திருக்குறள் - 25



திருக்குறள் - 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
பொருள்: புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுபடுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.