Total Pageviews

Tuesday, October 13, 2015

Thirukural - 923 கள்ளுண்ணாமை - ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.

கள்ளுண்ணாமை


Thirukural - 923 கள்ளுண்ணாமை -
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்  சான்றோர் முகத்துக் களி.

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/10/thirukural-923.html

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
மு.வ உரை: 
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
சாலமன் பாப்பையா உரை: 
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.
Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes; 
What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

Thursday, October 1, 2015

Thirukural - 922 - கள்ளுண்ணாமை - உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.



Thirukural - 922 - கள்ளுண்ணாமை - உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்  எண்ணப் படவேண்டா தார்.

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/10/thirukural-922.html

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
மு.வ உரை: 
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
சாலமன் பாப்பையா உரை: 
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.
Translation:
Drink not inebriating draught. Let him count well the cost. 
Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

Saturday, August 15, 2015

Thirukural - 921 - கள்ளுண்ணாமை - குறள் 921: - உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.

கள்ளுண்ணாமை

http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/08/921.html

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
மு.வ உரை: 
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
சாலமன் பாப்பையா உரை: 
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
Translation:
Who love the palm's intoxicating juice, each day, 
No rev'rence they command, their glory fades away.
Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).